இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தனது படை கண்ணியமாகச் செயற்பட்டது என்றால் அதனை நிரூபிக்க வேண்டிய…
தங்களது படை சரியான முறையிலே சர்வதேச நியமங்களைக் கடைப்பிடித்துத்தான் இந்தப் போரைச் செய்தது என்று நிரூபிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. இதற்கு முதற் சான்றாக அமையப் போவது ஜகத் ஜயசூரிய அவர்களின் வழக்கு என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்…
சுயநிர்ணய உரிமையும், இறைமையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் அடிப்படையானவை:…
“இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல்கோரிக்கை என்பதும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படியிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.“ என்று தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்…
20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு…
மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. சிறிலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, குழுநிலை…
இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட…
இலங்கை பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுகளுடான நினைவுப் பேருரையும், ‘இலட்சிய இதயங்களோடு’ என்னும் கருப்பொருளிலான நூல் வெளியீடும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். பொதுநூலக…
போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும் –…
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,…
தவறு செய்தவர்களை பாதுகாப்பது நியாயமற்றது – அரச தலைவர்களுக்கு சரத்…
இராணுவ சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச்…
உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்
“உண்மையை மறைத்து நாட்டில் நல்லிணக்கத்தை அடைய முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நாட்டில் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை…
எவ்வளவு காலத்திற்கு பேச்சுவார்தைகள்? தீர்க்கமான முடிவுதான் என்ன: துயரத்தில் மக்கள்
சொந்த மண் மீட்புக்காக போராடும் நிலைமை தமிழர்களுக்கு எழுதப்பட்ட விதியாகியுள்ளது, அன்று பிள்ளைகள் போராடினார்கள் இன்று அதே மண் மீட்புக்காக நாம் போராடுகின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்…
உண்மை வெளிவந்து விட்டது, எப்போது விசாரணை?
குட்டை குழம்பினால் மீன்பிடிப்பது இலகுவானதுதான் என்பது இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இடையிலான கருத்து மோதல்களைப் பார்க்கும் போது தெளிவாகவே தெரிகின்றது. பொதுமக்களுக்கு எந்த இழப்புகளும் இல்லாத போர் என்று வெளி உலகுக்குப் பறை சாற்றப்பட்டு நடத்தப்பட்ட போரில் மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்கிற உண்மை சற்றே கசிந்திருக்கிறது.…
சரணடைந்து வவுனியா முகாம் சென்ற இசைப் பிரியா: பின்னர் இழுத்து…
மே 18 யுத்தம் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களில் ஊடகவியலாளர் இசைப் பிரியாவும் அடங்கும். அவரை முதலில் யார் என்று தெரியாமல் வவுனியா தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்ற, ராணுவத்தினர் அவரை அங்கே அடைத்து வைத்தார்கள். பின்னர் அவரை…
புதிய அரசியல் அமைப்புக்கு நாடளாவிய ரீதியில் மக்கள் ஆதரவு: அமெரிக்காவிடம்…
புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப் போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர் என அமெரிக்காவிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது. அரசமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர்…
உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு : சம்பந்தன்
எமது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காகவே நாங்கள் கடுமையாக முயன்று வருகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில், நேற்று மாலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை…
போர்க் குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை
பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த…
கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சியா?
முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிலாசை நோக்கிய அரசியல் நகர்வு என்பது தனி ஈழக் கோரிகையில் இருந்து விடுபட்டு அதிகாரத்துடன் கூடிய சமஸ்டி நோக்கி நகர்ந்தது. தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பையே கருதி…
ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விவரணப் படத்தை வெளியிட்ட சனல் 4
ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரேசில் நீதிமன்றத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் இந்த விவரணப் படத்தை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இந்த விவரணப் படத்தை கெலம்…
மனிதப் படுகொலைகள் விடயத்தில் ஜெனரல் ஜயசூரிய குற்றமிழைத்தார்
இறுதிப் போரின் போது மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட சில குற்றங்களுடன் இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்புபட்டுள்ளார். அது குறித்து நான் அறிவேன். அவருக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டால் சாட்சியமளிப்பேன். இவ்வாறு, இறுதிப் போரை வழிநடத்திய இலங்கை இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத்…
தமிழர்களை மஹிந்தவே காப்பாற்றுவார்! சம்பந்தன் நம்பிக்கை
தமிழர்களுக்கு தேவையான அரசியல் தீர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினாலேயே வழங்க முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியமையினால் இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வர முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என…
இலங்கைத் தமிழரை ஒருபோதும் இந்தியா கைவிடாது! சம்பந்தனிடம் உறுதியளித்த சுஸ்மா
இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும். எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாகத்…
சர்வதேச பொலிசார் பிடி ஆணை : ஜெகத் ஜயசூரியா மீது…
இது நாள் வரை, தனக்கு பிடிக்காத நபர் என்றால் கூட சர்வதேச பொலிசார் பட்டியலில் அவர்களது பெயரை இணைத்து தமிழர்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கி வந்தது இலங்கை அரசு. அதுவும் மகிந்த ஆட்சிக் கலாத்தில் பல தமிழர்களது பெயரை , அவர்கள் இன்ரர் போலிடம் கொடுத்து பிடியாணை பிறப்பித்து…
ஈழத் தமிழரின் இன்றைய தேவை உறுதியான தலைமை
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்கள், தமது தலைவர் என்று எவரையாவது குறிப்பிட்டால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையே குறிப்பதாக அமைந்திருந்தது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தலைவராக அவர் காணப்பட்டார். தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களிலும் பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர்களே பங்குபற்றினார்கள். புலிகளின்…
உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்குப் போடும் நிலைமை :…
பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் நீதி, நியாயம் கிடைப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டதால்தான் நமது மக்கள் வெளிநாடுகளில் வழக்குப் போடும் நிலைமை வந்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னித் தளபதியாக இருந்தவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான…
சர்வதேச விசாரணையின் மூலமே காணாமல் போனவர்களுக்கான நீதி கிடைக்கும்!
சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே காணாமல் போனவர்களின் விடயத்திற்கு நீதி கிடைக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து…
அரசு பொறுப்புக்கூறலில் இருந்து பின்வாங்கவில்லை : இலங்கைக்கே உரிய பாணியில்…
பொறுப்புக்கூறலில் இருந்து அரசு பின்வாங்கவில்லை என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கே உரிய பாணியில் மெதுவாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்…


