உலகில் நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை: உலக சுகாதார நிறுவனம்

நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை என்ற வேகத்தில் உலகில் தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலை தவிர்ப்பு சம்பந்தமாக உலக சுகாதார கழகம் முதல் தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலுமாக ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று விவரம் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் முக்கால்…

அமெரிக்காவின் தலையீடு – உக்ரேன் கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர போர்…

உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுடன் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உக்ரேன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பேர்சென்கோ குறிப்பிட்டுள்ளார். சமாதானத்தை ஏற்படுத்துதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் இரண்டு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர…

அமெரிக்க ஊடகவியலாளர் கொலையைக் கண்டு அஞ்சபோவதில்லை: ஒபாமா

அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார். எஸ்டோனியா சென்றுள்ள அதிபர் ஒபாமா, அந்நாட்டின் தலைநகர் டல்லின் நகரில் இருந்து கருத்து வெளியிடுகையில், கொலையாளிகளின் நடவடிக்கை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை என்று கூறினார். தன்னை…

உக்ரைன் விவகாரம்: ரஷியா, நேட்டோ இடையே பதற்றம்

ரஷியாவையொட்டிய உக்ரைன் பகுதியில் தனது வீரர்களை அனுப்ப நேட்டோ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், உக்ரைன் எல்லையில் தனது ராணுவ வலிமையை அதிகரிக்கப் போவதாக ரஷியா அறிவித்துள்ளது. இதனால், உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி ரஷியா, நேட்டோ நாடுகளுக்கிடையில் பதற்றம் உருவாகியுள்ளது. பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்…

போலீஸ் வாகனம் மீது தாக்குதல்: எகிப்தில் 11 பேர் பலி

எகிப்தில் போலீஸ் வாகனம் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 11 காவலர்கள் உயிரிழந்தனர். எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள ஷேக் ஸýவாயித் எனுமிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸார் வாகனத்தைக் குறி வைத்து நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் அதிகாரி ஒருவரும் 10 காவலர்களும் கொல்லப்பட்டனர். நால்வர்…

அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள்

லிபியாவில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் அங்கு இயங்கும் தீவிரவாத குழுக்கள், அந்நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். சமீபத்தில் தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர். இந்நிலையில் லிபியாவில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தை  தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தீவிரவாதிகளால் சமீபத்தில் தலைநகர் திரிபோலியில் உள்ள…

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா

பிராந்திய நாடுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. குறுந்தூர ஏவுகணை ஒன்றே இவ்வாறு பரிசோதிக்கப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் குறித்த குறுந்தூர ஏவுகணை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 60 கிலோ மீற்றர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடிய வகையில் குறித்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வடகொரியாவின்…

ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் அடுத்த குறி யார்?

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார். சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது சவுதி மன்னர் அப்துல்லா இதுகுறித்து கூறியதாவது, நாம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை புறக்கணித்தால், அவர்கள் அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு…

கிழக்கு யுக்ரெய்னின் ‘தேச அந்தஸ்து’ பற்றி பேச வேண்டும்’: புடின்

கிழக்கு யுக்ரெய்னுக்குரிய 'தேச அந்தஸ்து' தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தப் பிராந்தியத்தில் தொடரும் மோதல்களுக்கு முடிவு காண்பதற்கான முயற்சிகளின் அங்கமாக இந்த பேச்சுக்கள் அமையவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கிழக்கு யுக்ரெய்னில் வாழும் மக்களின் 'சட்டபூர்வ…

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: அமெரிக்கா…

இராக், சிரியாவில் அதிக இடங்களைக் கைப்பற்றியதுடன், பிற நாடுகளிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ஆயத்தமாகி வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, "நியூயார்க்…

எபோலா நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு!

தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் உலுக்கி வரும் செய்தியாக எபோலா வைரஸ் தொற்று காணப்படுகின்றது. உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் ஆனது மனிதர்களில் மட்டுமன்றி குரங்குகளிலும் தொற்றுகின்றது. தற்போது ZMapp எனும் புதிய மாத்திரையினைப் பயன்படுத்தி குரங்குகளில் காணப்பட்ட எபோலா வைரஸ் தொற்றுக்கு வெற்றிகரமாக நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பிரித்தானியாவையும் ஆட்கொண்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலாளர் தெரேசா மேய் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக, இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நாடுகளில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாத குழுக்களுடன் பிரித்தானியாவைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து  செயற்படுகின்றனர். மேலும்…

அணுசக்தியில் வல்லமை படைத்த ரஷ்யாவிடம் வாலாட்ட வேண்டாம்: புதின் எச்சரிக்கை

மாஸ்கோ, ஆக.30- அணுசக்தியில் வல்லமை படைத்த நாடான எங்களிடம் வாலாட்ட வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைநகர் மாஸ்கோ அருகே க்ரெம்ளெனில் உள்ள செலிஜர் ஏரிக்கரையில் இன்று மாணவர்களிடையே பேசுகையில் ‘உக்ரைன் அரசின் வன்முறையில் இருந்து கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்ய மொழி…

கிழக்கு உக்ரைன் சண்டையில் 2,600 பேர் பலி: ஐ.நா. தகவல்

ரஷிய ஆதரவுப் படையினரிடமிருந்து உக்ரைன் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களை கீவ் நகரில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கும் சர்வதேச ராணுவப் பார்வையாளர்கள். கிழக்கு உக்ரைனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் 2,600 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நெருக்கம் மிகுந்த…

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யாருக்கு வெற்றி?

காஸாவில் குண்டுச் சப்தங்கள் ஓய்ந்துவிட்டன.முக்கிய பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படாமலேயே கடந்த மாதம் 8-ஆம் தேதி அங்கு இஸ்ரேல் தொடங்கிய "ஆப்பரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்', கடந்த செவ்வாய்க்கிழமையோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த அமைதி எத்தனைக் காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நடந்து முடிந்த போரில் வெற்றி யாருக்கு…

ஐ.எஸ். எதிர்ப்பு: அஸாதுடன் கைகோக்க பிரான்ஸ் மறுப்பு

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியா அதிபர் அல்-அஸாதுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என பிரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்சுவா ஹொலாந்த் வியாழக்கிழமை கூறுகையில், ""சிரியா அதிபர் அல் அஸாத், மத அடிப்படைவாதிகளின் கூட்டாளி. சிரியாவிலும், இராக்கிலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை, மனிதநேயத்துடன் கூடிய ராணுவ பலத்துடன் மட்டுமே…

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு நேரடிப் பங்கு: அமெரிக்கா குற்றச்சாட்டு

ரஷிய ஆதரவுப் படையினருக்கு எதிராகப் போராடுவதற்கு தன்னார்வ வீரர்களை அனுமதிக்க வலியுறுத்தி, உக்ரைன் தலைநகர் கீவில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷியா நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக அமெரிக்கா வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. உக்ரைனின் தென்கிழக்கில், அரசுப் படைகள் வசமிருந்த பகுதிகளில் பலவற்றை ரஷியா ஆதரவுப்…

பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி பாகிஸ்தான்: அமெரிக்கா விமர்சனம்

பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பயங்கரவாதிகளால் அமைதியை இழந்து தவிக்கின்றது. நீண்ட காலமாக பயங்கரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த…

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் அமெரிக்க இளம்பெண்

வாஷிங்டன் : மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில், 26 வயது அமெரிக்க பெண் ஒருவர் சிக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் சமூக சேவை செய்து வந்த அந்தப் பெண், கடந்த ஆண்டு பயங்கரவாதிகளிடம்…

நீண்ட கால போர்நிறுத்தம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக நடைபெற்ற போரில் 2,137 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலைச் சேர்ந்த 68 பேரும் பலியானார்கள். இரு தரப்புக்கும் இடையே சமரசம்…

சிரியாவில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகிறது அமெரிக்கா

சிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, அங்கு ஆளில்லா உளவு விமானங்களை பறக்கச் செய்வதற்கான ஆயத்த வேலைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழில் வெளியான செய்தி: இராக்கிலுள்ள…

பாகிஸ்தானில் தலிபான் தளபதி படுகொலை

பாகிஸ்தானின் கைபர் பகுதியில் தெஹ்ரிக்-ஏ-தலிபான் தளபதி ஒருவர் வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இல்லத்துக்கு வெளியே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், நேட்டோ லாரி ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…

அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால் ஐ.எஸ்.ஸூடன் நேரடி யுத்தம்

"ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால், அந்த அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்' என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார். ராணுவ விமானமொன்றில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தற்போது இராக்…