அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
சீனாவில் எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
சீனாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டுப் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் க்ஸிங்ஜியாங் மாகானத்தை சேர்ந்த எட்டு தீவிரவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்…
லிபியாவின் பிரதான விமான நிலையத்தை கைப்பற்றிய போராளி குழு
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா பகுதி போராளிகள் அறிவித்துள்ளனர். லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முவம்மர் கடாபி கொல்லப்பட்ட பிறகு தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற இஸ்லாமிய போராளி குழுக்கள் தீவிரம் காட்டி வந்தன. இதனால் அந்நாட்டு தேசிய படைக்கும்,…
சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை 2 லட்சம் பேர் பலியானதாக…
சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிரியாவின்…
மசூதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் – 70 பேர் சுட்டுக்கொலை
ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் மசூதி மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள சன்னி பிரிவு ஆதரவு தீவிரவாதிகள் கைப்பற்றிய தியாலா உள்ளிட்டப் பகுதிகளை மீட்கும் முயற்சியில், ஷியா பிரிவு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தியாலாவில்…
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா
ரஷ்யாவில் இயங்கி வந்த அமெரிக்காவின் நான்கு உணவகங்களை தாற்காலிகமாக மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. நான்கு மெக்டொனால்ட் உணவங்களை தற்காலிகமாக மூட ரஷ்யா சுகாதார துறை அதிகாரிகள் உத்த விட்டுள்ளார்கள். இந்த நான்கு மெக்டொனால்ட் உணவகங்களும் சுகாதாரமான வகையில் பராமரிக்கப்படவில்லை ரஷ்ய சுகாதாரதுறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளர். இதுபோன்ற ரஷ்யாவில் உள்ள…
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒடுக்க இந்தோனேசிய அதிபர் வேண்டுகோள்
சிட்னி : ''ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கொடூர செயல்கள், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க, உலகம் முழுவதும் ஒன்றிணைய வேண்டும்,'' என, உலகில் அதிக முஸ்லிம்கள் வசிக்கும், இந்தோனேசியா நாட்டின் அதிபர், சுசிலோ பாம்பாங் யுதோயோனோ கூறினார். ஆஸ்திரேலிய…
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவரா?
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிலிப் ஹேமன்ட்(Philip Hammond) கூறியதாவது, ஐரோப்பாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே…
லண்டனில் பிரமாண்ட இந்து கோவில் திறப்பு
லண்டன் : சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதத்தில், பசுமை தன்மைகளுடன், உலகின் முதல் இந்து கோவில், லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், சுவாமி நாராயண் மந்திர் அமைப்பின் சார்பில், 160 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, சுவாமி நாராயண் கோவில், இந்திய கட்டடக் கலை அம்சங்களுடன்,…
போர் நிறுத்தம் முறிவு: காஸாவில் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலால் தரைமட்டமான ஹமாஸ் இயக்க ராணுவத் தலைவர் முகமது டீஃபின் இல்லம். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் சண்டை தொடங்கியது. இதனால், ஐந்து நாள்களாக அமைதி நிலவி வந்த காஸா பகுதி மீண்டும் போர்க்களமானது. ஹமாஸ்…
அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்த ஐஎஸ்ஐஎஸ்:…
வாஷிங்டன், ஆக. 20– ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த…
கள்ளத்தனமாக வெளிநாடு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
குடியுரிமை அதிகாரிகளிடம் விசா பெறாமல் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. செல்வ வளம் மிக்க நாடுகளுக்கு சென்றுவிட்டால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என பேராசை பிடித்த சிலர் சட்டத்தை மீறி சரக்கு பெட்டகத்தில் திருட்டுத்தனமாக பயணிக்கின்றனர். இதுபோன்ற…
கருப்பின இளைஞர் படுகொலை: அமெரிக்காவில் கலவரம் நீடிப்பு
அமெரிக்காவின் மிசூரி மாகாணத்திலுள்ள ஃபெர்குஸன் நகரில் 18 வயது கருப்பின இளைஞர் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்நகரில் ஏற்பட்ட கலவரம், ஒரு வாரத்தைத் தாண்டி திங்கள்கிழமையும் தொடர்ந்தது. பல இடங்களில், சூறையாடல், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தொடர்ந்து, அந்நகருக்கு தேசிய காவல்படை…
உக்ரேன் விவகாரம் மூன்றாம் உலகப் போரைத் தோற்றுவிக்குமா?
கடந்த சில தினங்களுக்கு முன்னர், உக்ரேன் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களுக்காக ரஷ்யா நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்து. 280 பார ஊர்திகள் மூலம் மக்களுக்கான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பார ஊர்திகளில் ரஷ்ய இராணுவத்தினரும் பயணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விரிவான விளக்கத்தினையும் அது…
700 பேரை கொன்று குவித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மோசுல் நகரை மீட்பதற்கான மோதல்களில் குர்திஸ் படைத்தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அமெரிக்காவின் வான்படையினரும் உறுதுணைக்காக ஆதரவு வழங்கி வருகின்றனர். ஈராக்கின் மிகப்பெரிய நீர்நிலையை மீட்கும் நோக்கில் நேற்று முதல் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களை இனப்படுகொலைகளுக்கு…
உக்ரேன் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் ரக போர் விமானம் ஒன்று ரஷ்ய கிளர்ச்சிக் குழுவால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குறித்த ஜெட் விமானம் கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் மாகாணத்தில் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த விமானி பாரச்சூட் உதவியுடன் உயிர் தப்பியதாக உக்ரைன் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லியோனிட்…
சீனாவில் புயல் மழை: 27 பேர் பலி
சீனாவின் தென் மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 87 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புஜியான், ஜியாங்க்சி, ஹூனான், குவாங்டாங், சிச்சுவான், கியுஸூ மற்றும் குவாங்ஸி ஜுவாங் மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் 27 பேர் பலியாயினர். 6…
ரஷிய நிவாரணப் பொருள்கள்: உக்ரைனில் சிக்கல் நீடிப்பு
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரஷியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களை உக்ரைனுக்குள் அனுமதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அவை உக்ரைன் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனின் கீவ் மற்றும் மேற்குப் பகுதிகளில் அரசு ஆதரவுப் படையினருக்கும், பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று…
ஈராக்கின் சிஞ்சார் மலையில் பார்வை பறிபோய், கோமா நிலையில் கைவிடப்பட்ட…
டமாஸ்கஸ், ஆக.16- ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஜிஹாதி போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். மோசூல் நகரின் பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்ளை ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அப்பகுதியில்…
காஷ்மீர் விவகாரத்தால்தான் இந்திய-பாகிஸ்தான் உறவில் நெருடல்
"காஷ்மீர் விவகாரத்தாலேயே இந்திய-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்த காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதித் தீர்வு காண வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தார். அந்நாட்டு சுதந்திர தின விழாவையொட்டி ஆற்றிய உரையில் இதுகுறித்து அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதியான முறையில்…
எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு
எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 128 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கினி, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் கடந்த ஆகஸ்ட் 11,12 தேதிகளில் 56…
மலையில் யாஸிடி இன மக்கள் வெளியேற்ற அமெரிக்கா முடிவு
ஹோனியரா:ஈராக்கின் வடக்கு பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பயந்து, சிஞ்ஜார் மலையில் தஞ்சம் புகுந்துள்ள, 20 ஆயிரம், யாஸிடி சிறுபான்மையின மக்களை எவ்வாறு அங்கிருந்து வெளியே கொண்டு செல்வது என்பது குறித்து, அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது,'' என, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடுகளில்…
உதவிப் பொருள்களுடன் உக்ரைன் புறப்பட்ட ரஷிய லாரிகள்
உக்ரைன் மற்றும் மேலை நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு நிவாரணப் பொருள்களுடன் 280 ரஷிய லாரிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து, ரஷிய அரசு அந்த வாகனங்களை அனுப்பியுள்ளது. எனினும், அந்த வாகனங்களில் என்ன…
ரஷ்யாவின் உணவு தடையால் கனவாய் போன பிரான்ஸ் விவசாயம்
பிரான்ஸ் நாட்டிலிருந்து உணவு பொருட்கள் இறக்குமதியை ரஷ்யா தடை செய்ததால் பிரான்ஸ் விவசாயிகள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். 90 சதவீத ஆப்பிள் மற்றும் பியர்ஸை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் பிரான்ஸ் நாட்டின் பிரபல உணவு ஏற்றுமதியாளாரான ஜீன் செல்வெரோ, ரஷ்யா விதிக்கப்பட்ட தடையால் மாதத்திற்கு 200 ஆயிரம் பவுண்ட்ஸ் நஷ்டம்…