தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும்? –…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அரசாங்கம் போர்க்குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளினால் நடாத்தப்படும் சர்வதேச விசாரணைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளித்தால், இவ்வாறு விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால்…

அமெரிக்காவின் அறிக்கை விளங்கவில்லை: நேரடி தாக்குதலில் இறங்கியுள்ள இலங்கை அரசு…

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழில் இருந்து கொழும்பு சென்ற தமிழ் செய்தியாளர்களை, ஓமந்தையில் மறித்த பொலிசார் அவர்கள் பயணித்த வாகனத்தின் மிகவும் கீழ் தரமாக கஞ்சாவை வைத்து, ஏதோ இந்திய சினிமா படங்களில் வருவது போல நாடகமாடியுள்ளார்கள். இதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் பயந்து ஒதுங்கவில்லை. மறாக அவர்கள்…

இந்தியா செல்ல மறுக்கும் ஈழ அகதிகள் பப்புவா நியுகினி அனுப்பி…

இந்தியாவுக்கு செல்ல மறுக்கும் ஈழ அகதிகள் அனைவரும் பப்புவா நியுகினிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் படகு மூலம் அகதிகளாக சென்ற 157 ஈழ அகதிகளும் தற்போது கேர்ட்டின் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. எனினும் இந்தியா…

போர்க்குற்ற விசாரணைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறது கூட்டமைப்பு –…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்குழுவிடம் கையளிப்பதற்கான விசேட அறிக்கை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. யுத்த குற்ற விசாரணையை மேற்கொள்கின்ற குழுவில் சாட்சி வழங்கிய இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும் தடையையும் மீறி சாட்சி…

நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு அழைப்பும் வரவில்லை – தமிழ்த் தேசியக்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து தமக்கு இன்னமும் எந்த அழைப்பும் வரவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர் கொண்ட குழு, அடுத்தமாத துவக்கத்தில் புதுடெல்லி…

மக்ரே, ஹரிசன், சொல்ஹெம், விக்கி ஆகியோர் ஐ.நா விசாரணைக்குழு முன்…

சனல்4  ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மக்ரே,  இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம், பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு…

பிரபாகரனைத் தேடும் தென்பகுதி முஸ்லிம்கள்!

அண்மையில் நடந்துள்ள அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை வன்செயல்களின் எதிரொலி புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை அப்பகுதி முஸ்லிம்கள் நினைக்கின்றார்கள். தேடுகின்றார்கள். சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்முறைகள் எழுகின்ற போதெல்லாம் பிரபாகரனை நினைக்கின்றதை யாராலும் தடுக்க முடியாதுள்ளது. புலிகள் முஸ்லிம்கள் மீது சில கசப்பான செயல்களைச் செய்திருந்த…

தமிழ் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு விஜயம்!- ஐநா விசாரணைக்குழு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று வரும் ஆகஸ்ட்  மாத முற்பகுதியில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை…

இனவிகிதாரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம்

யாழ் குடாநாட்டில் இராணுவத்தினருக்கு முகாம்கள் அமைக்க காணிகள் சுவிகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் தொவிக்கப்படுகின்றது. உண்மையில் இராணுவ முகாம் என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களே இந்த மண்ணில் இடம் பெறுகின்றன என் மாவை சேனாதிராசா குறிப்பிட்டார். இலங்கை தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறை கிளைத்திறப்பு விழா தெல்லிப்பளை ஆனைக்குட்டி மதவடியில் உள்ள தனியார் இல்லத்தில்…

இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரைவார்ப்பு?

இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டள்ளதாக சர்வதேச இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை பிரதேசத்தின் சுமார் 1200 ஏக்கர் காணி, சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால குத்தகை அடிப்படையில் இவ்வாறு திருகோணமலையின் ஒரு பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மேம்பாட்டு நோக்கிற்காக இந்த காணியை சீனா பயன்படுத்திக்கொள்ளும்…

இலங்கை இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசைப் போலக் கருதி…

இலங்கையைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், தற்போதுள்ள பா.ஜ.க. அரசானாலும் சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதிலேதான் முனைப்பாக உள்ளது. இவ்வாறு திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான கடிதம்: கேள்வி:- இலங்கை அரசு மேலும்…

பிரபாகரனால் முடியாததை நவனீதம்பிள்ளை முயற்சி செய்கிறார்: அரசாங்கம் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஒரு காட்சியாகும்(Show) என்று அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த விசாரணையின் முடிவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரனால் செய்ய முடியாததை நவநீதம்பிள்ளை வேறு வழிகளால் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே…

கொழும்பில் ஆகஸ்ட் 18- 20 வரை இராணுவக் கருத்தரங்கு: இந்திய…

இலங்கையின் தலைநகர் கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதி தொடங்கி 20 ம் திகதி வரையுள்ள மூன்று நாட்களாக இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கு நிகழ்வில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர்களில்…

சர்வதேச விசாரணைக் குழுவில் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேச துரோகம்: வசந்த…

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நியமித்த சர்வதேச விசாரணைக் குழுவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேசத்துரோகமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டொக்டர் வசந்த பண்டார தெரிவிக்கையில், சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில்…

157 இலங்கை அகதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற 157 இலங்கை தமிழர்களும், இந்தியாவில் இருந்து வந்தமையால் அவர்கள் இந்தியர்களாக கருதப்படுகின்றனர். இந்தியா முழுமையான ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இந்த 157 பேரும் பொருளாதார அகதிகளாக கருதப்பட்டு இந்தியாவுக்கு, திருப்பியனுப்பப்படவுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வானொலி ஒன்றில் இன்று…

கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும் என்கிறது அரசாங்கம்

சர்­வ­தேச அமைப்­புக்­களை தூண்­டி­விட்டு நாட்டை பிரிக்க முயற்­சித்து வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு சர்­வ­தே­சத்­தி­னா­லேயே அழிவு ஏற்­படும் எனவும் அர­சாங்கம் எச்­ச­ரித்­துள்­ளது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த அர­சாங்கம் நினைக்­கின்­றது என அக் கட்­சியின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்­ளதை அடுத்து அது தொடர்பில் அர­சாங்­கத்­திடம் வின­விய போதே…

சர்வதேச விசாரணைக்கு இலங்கை உண்மைத் தகவல்களை வழங்கவேண்டும்!- ஜப்பான்

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு உரிய தகவல்களை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் விசாரணை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு…

கறுப்பு ஜூலையை மறக்க முடியாது!- மில்லிபேன்ட்

1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை தொடர்பான நினைவுகள் இன்னும் மறையவில்லை என்று பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர் எட்வேட் மில்லிபேன்ட் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் வன்முறையால் கொல்லப்பட்டனர். அதன் நினைவுகள் இந்;த மாதத்தில் நினைவுகூரப்படுகின்றன. இந்த வன்முறைகளில்…

பாலியல் வன்முறை: யாழ் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் காரைநகரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது உட்பட யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் கொலைகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான அழைப்பை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற…

157 தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது மண்ணுக்கு கொண்டுசெல்ல ஆஸி. முடிவு

படகில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன், ஆஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு…

இந்தியாவின் இரட்டைவேடம் – இஸ்ரேலுக்கு ஒன்று சிறீலங்காவிற்கு ஒன்று!

பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில், 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி…

காணிகளை கொள்ளையிடுவோர் பயங்கரவாதிகளே!– மாவை சேனாதிராஜா

எவரேனும் காணிகளை கொள்ளையிடுகின்றனர் என்றால் அவர்களை பயங்கரவாதிகளாகவே நோக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணிகளை சுவீகரிப்பதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காணப்பிரச்சினை காரணமாக…

வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

முற்றாகஅழிந்துள்ள ஒரு ஆலயம்   இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள். மயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள…