நியாயமான தீர்வை முன்வைத்தால் ஏற்றுக்கொள்வோம்! மகிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறினார் கூட்டமைப்பின்…

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! விளைவுகள் பாரதூரமாக இருக்கும்!- தமிழ்…

எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை  அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய ஜனாதிபதி ஊடகமொன்று எழுப்பிய பிரத்தியேகமான…

போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர்!- தயா ரட்நாயக்க

போர்க்குற்ற விசாரணைகளின் போது எவராது குற்றம் இழைத்தவராக கண்டுபிடிக்கப்பட்டால்,  உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக்காக புதிய வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்துக்கு…

போர்க்குற்ற சாட்சியங்களை கூட்டமைப்பின் ஊடாக வழங்கலாம்: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால், கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க விரும்பும் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதவுரிமைகள்…

இலங்கையில் காணாமல்போனவர்களின் பட்டியல் தயாரிக்க செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி

இலங்கையில் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினாலேயே இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரச சார்பற்ற நிலையில் இந்த முயற்சிகளை மேற்கொள்ள செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக…

ராஜீவ் கொலை வழக்கு! குமரன் பத்மநாதனை கைது செய்து விசாரிக்க…

கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் இந்தியாவில் விசாரணை நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்து நீதிமன்றம்…

போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோள்! வடமாகாண…

போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்த இடங்களில் ஒரு மறுமலர்ச்சியை மறுசீரமைப்பை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருக்கின்றது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுழமுனை கிராமத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு…

தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன!– சம்பந்தன்

தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். காலவரதேய சட்டம் தொடர்பிலான நாடாளுன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன. போரின் பின்னர் வடக்கு…

தமிழர்களின் தலைவிதியை மாற்றியமைக்க கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்: பா.அரியநேத்திரன்

வெறுமனே அபிவிருத்திக்காகவும், சலுகைகளுக்காகவும் வாக்களிப்பவர்களாக இருப்பார்களேயானால் எங்களது உரிமையை வென்றெடுக்க முடியாது. தமிழர்களது எதிர்காலத்தினை சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கக் கூடிய த.தே.கூட்டமைப்பை பலப்படுத்தினால் மாத்திரமே இழந்த இழப்புக்களுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். தாந்தாமலை மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டவேளையிலேயே இதனை தெரிவித்தார்.…

ஆதாரங்களை அனுப்பி வைக்குமாறு கோருகிறது ஐ.நா.விசாரணைக்குழு

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐ.நா.விசா­ரணை குழு­விடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ளரின் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது.  21.02.2002 முதல் 15.11.2011 வரை­யான காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை தெரி­விக்­கலாம்…

இலங்கை வடமாகாண சபைக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வலுக்கிறது

இலங்கையின் வட மாகாண சபைக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்து வருகிறது வட மாகாண சபையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மூன்று மசோதாக்கள் தொடர்பிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருந்த போதிலும், அது மாகாண சபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

அடிவாங்காமல் அருந்தப்பில் தப்பிய சிங்கள புத்த பிக்குகள்: பாதுகாப்பாக தப்பியோட்டம்…

வாரணாசி செல்வதற்காக சென்னைக்கு வந்த புத்த துறவிகள்- யாத்ரிகர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இலங்கை அரசின் இராணுவ இணையதளத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி சமீபத்தில் அவதூறு கருத்து வெளியாகியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான போராட்டம்…

வடமாகாணசபையில் அதிகாரிகள் தனி ராஜங்கம்! சீற்றத்தில் கூட்டமைப்பு!!

வடமாகாணசபையில் அதிகாரிகள் ஆளுநரின் கீழு தனியான இராஜங்கம் நடத்திவருகின்றனர். நிதி நியதிச்சட்டம் இன்று வடக்கு மாகாண சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதம் நடைபெறுகின்ற நிலையிலும் கூட பிரதம செயலாளர் பிரசன்னம் ஆகவில்லை எனவே இதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

இலங்கை மீதான ஐ.நா விசாரணை தொடங்கியது – குற்றச்சாட்டுகள் மற்றும்…

நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார்…

சிறீலங்காவில் சட்ட ஒழுங்கை அமுல்படுத்துமாறும் அமெரிக்கா வலியுறுத்தல்

வடக்கில் இருந்து காணாமல் போன உறவுகளின் உறவினர்களுடனான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள குடும்பத்தினரினது பாதுகாப்பை, கொழும்பிலும் மீண்டும் வீடு திரும்பியதன் பின்னரும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது…

இன வன்முறையை தூண்டி மோதலை உருவாக்கச் சதி – சரவணபவன்

சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டமை, அங்கு கல்விகற்கும் தமிழ் மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை என்பன மீண்டும் இன வன்முறையைத் தூண்டி மோதல் போக்கை உருவாக்குவதற்கான சதி நடவடிக்கையே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள…

தெற்கில் தமிழ் மாணவன் தாக்குதலை யாழ் பல்கலை கண்டனம்!

சிறீலங்காவின் தெற்கில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டடிருந்தார். அத்துடன் குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற…

தமிழ் பேசும் மாணவர்களை வெளியேறுமாறு சிங்கள மாணவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள்…

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் உள்ள முதலாம் வருட மாணவர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சுவரொட்டிகள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஞாயிறு அதிகாலை தமிழ் மாணவன் ஒருவர் மீது முகமூடி அணிந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்ஸன்…

இந்தியப் படைகளை அனுப்பியது ராஜிவ்காந்தியின் உணர்சிவசப்பட்ட தீர்மானம் – கேணல்…

தமிழீழ விடுதலைப் புலிகளை 72 மணித்தியாலங்களில் அழித்துவிட முடியும் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி சுந்தர்ஜீ, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியிடம் உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஹரிகரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா அமைதிகாக்கும் படையை அனுப்பி இருந்தமை…

காணாமல் போனோரது குடும்பங்கள் இலங்கையிலிருந்து வாக்குமூலம்!!

ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இலங்கையிலிருந்து சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால்…

ஐ.நா விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் – காணாமல் போனவர்களின்…

ஐக்கிய நடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் என காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க…

ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லை! மக்களை ஏமாற்றும் செயல்!-…

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவானது போலியான ஓர் வெளிக்காட்டலேயாகும். கடந்த காலங்களிலும்…

வடக்கு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டாம் என கூட்டமைப்பிடம் இந்தியா…

வடக்கு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியா கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு தமிழர் பிரச்சிகைளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்வதில்லை என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பெற்றுக் கொள்ளும் முயற்சியல் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா…