அந்தமானில் வசிக்கும் ஈழ அகதிகளுக்குள்ள பாரிய பிரட்ச்சனை!

இலங்கையில் இருந்து அந்தமானுக்கு சென்று அகதிகளாக வந்து குடியேறிய 48 இலங்கை தமிழர்கள் குடும்பத்துக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் பண்டாரநாயகே மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையில்…

மன்னார் புதைகுழியில் இதுவரை 54 எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக, சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்துள்ளார். மன்னார் நகர நுழைவாயிலில், பழைய சதோச கட்டடம் இருந்த பகுதியில், மன்னார் நீதிவான் பிரபாகரன் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி கடந்த 41 நாட்களுக்கு…

மன்னார் எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்!

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள்…

தமிழிழ விடுதலைப் புலிகளின் 12,186 போராளிகள் தற்போது எங்கே?

தமிழிழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 12,186 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களது வாழ்வாதாரம் என்ன? அவர்கள் எங்கு எவ்வாறான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை முன்னாள் போராளிகின் வாழ்க்கை குறித்து தேடிப்பார்க்க வேண்டிய சூழலில் ஒவ்வொரு தமிழர்களும்…

பறிபோகிறது வவுனியா! குடியேற்ற விபரத்துடன் சத்தியலிங்கம் அவசர கடிதம்!

யுத்தகாலத்திலும்,யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனால்வவுனியாமாவட்டத்தின்இனப்பரம்பலானதுமாற்றமடைந்துவருகின்றது. இந்தநடவடிக்கைதொடருமானால்திருகோணமலை,அம்பாறை,மாவட்டங்களின் நிலைதான் வவுனியாவிற்கும்ஏற்படுமென வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இந்தவிடயம்தொடர்பில்எதிர்க்கட்சிதலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவசரக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வவுனியாவடக்குபிரதேசசெயலகப்பரிவு…

மைத்திரி ஆட்சியிலும் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படும் தமிழர்கள்!

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஆட்சியிலும் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறு மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பிலான…

சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனித எச்சங்கள்..!

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று (25) புதன் கிழமை 41 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில்,விசேட சட்ட வைத்திய நிபுனர் தலைமையில் குறித்த பணிகள்…

இந்தியாவின் பங்கை கணிப்பிடுவது கடினம் – முதலமைச்சர்

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செல்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில்…

வாகரையில் 500 ஏக்கரை கைப்பற்றும் முயற்சியில் இராணுவம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கட‌ற்படை இராணுவ முகாம் அமைக்க 500 ஏக்கர் காணி கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் (23) வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் விவாதிக்கப்பட்டன. வாகரையில் இராணுவத்தினர் முகாம் அமைக்கும் முகமாக 500 ஏக்கர்…

செம்மணியில் மூன்று அடி ஆழத்திலேயே எலும்புகூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக இன்று மேற்கோள்ளப்பட்டு வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. நாயன்மார்கட்டு செம்மணி பகுதியில் நிலக்கீழ் தொட்டி அமைப்பதற்காக மண் அகழ்வுகளை மேற்கொண்ட போது மனித எலும்பு எச்சங்கள் இணங்கானப்பட்டுள்ளன. இதற்கமைய பொலிஸாருக்கு அளிவிக்கப்கட்டதையடுத்து அதுதொடர்பான…

கறுப்பு ஜூலை- யாழ்.பல்கலைக்கழத்தில் நினைவேந்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் ஏற்பாட்டில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழக கையிலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழக மாணவர்களுடன் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில்…

யாழ்.கோட்டையில் இராணுவம் தங்க நாம் அனுமதிக்க முடியாது – ஒருங்கிணைப்பு…

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத் தலைவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற…

யாழ்ப்பாணத்தில் பதற்றம்: அதிரடிப்படையினர் குவிப்பு!

யாழ்ப்பாணத்தின் வேறுபட்ட பிரதேசங்களில் இன்று முன்னிரவு பல பாரிய கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல கடைகள் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்த பெருந்தொகையான பணம் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. நல்லூர், முடமாவடி மற்றும் கோண்டாவில் பகுதிகளிலேயே கொள்ளையர்கள் தமது கைவரிசையினைக் காட்டியுள்ளனர். முடமாவடியிலும்…

சிங்கள இளைஞர்களின் மனிதாபிமானம்; இதுதான் மனிதநேயத்தின் உச்சகட்டம்!

தமிழ் சிங்களம் என்ற இனவாதங்கள் நாட்டில் பூதாகரமாக வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இன மத பேதங்களை கடந்து நடந்துள்ள சம்பவம் ஒன்று அனைத்து மக்களிடமும் வரவேற்பைப்பெற்று பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் அநாதரவாக விடப்பட்ட ஒருவருடன், இளைஞர்கள் சிலர் மனித நேயத்துடன் நடந்து கொண்டமை அனைவரையும்…

யாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக…

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93, இராணுவ முகாம்கள் 54 மற்றும் விமானப்படை முகாம் 01 என்பன உள்ளடங்கியுள்ளன. தீவகப் பகுதிகளிலேயே அதிகளவு கடற்படை முகாம்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் 61 முகாம்களை சிறிலங்கா…

கருணாவை பிரித்த அலி சாஹிர் மௌலானாவே இலங்கையின் அமைதிக்கு காரணமாம்!

இலங்கையின் இன்றைய அமைதியான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா. விடுதலைப்புலிகளின் கிழக்கு பிரிவிற்கு காரணமாக அமைந்து, அவர்கள் வலிமையிழந்து இராணுவரீதியில் தோல்வியடையவும் காரணமாக இருந்தவர் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம்…

மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மன்னர் நகர நுழைவாயிலில், சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில், கடந்த மே மாதம் தொடக்கம்…

உலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ள தமிழிச்சி..

உலகப்புகழ்பெற்ற ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling stones) நிறுவனத்தினரால்தரப்படுத்தப்பட்ட இந்த நுற்றாண்டின் சிறந்த பாடல்கள் வரிசையில்இரண்டாம் இடத்தினைப் பிடித்த "பேப்பர் பிளேனஸ்" (paper planes) என்னும் பாடலுக்குச் சொந்தக்காரரான மாதங்கி அருள்பிரகாசம் அவர்கள் கடந்துவந்த பாதை, "மாதங்கி, மாயா, எம்.ஐ.ஏ" என ஆவணப்படமாகவடிவம் பெற்றுள்ளது. எம்.ஐ.ஏ (M.I.A) என அழைக்கப்படும்…

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுவிசில் கைது..

வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும். இவர்கள் தற்போது…

கிளிநொச்சி இரணைமடுவில் 5000 இராணுவத்தினரை குடியேற்றும் சூழ்ச்சி! சிங்களமயமாகிறதா எஞ்சிய…

இரணைமடு பகுதியில் 5000 சிங்கள இராணுவத்தினரை குடியேற்றுவதற்கான முழு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், வட மாகாண மக்கள் ஒருவருட காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்…

மாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு சி.தவராசா…

மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள்…

படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி

சிறிலங்கா இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்பு பிரிவுகளின் அளவு குறைக்கப்பட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்துள்ளது. சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்பட்டு, படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக  வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார். “எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, 33 படைப்பிரிவுகளைச்…

இலங்கை மக்களின் நன்மைக்காக மனித உயிர் பலியெடுக்க தயாராகும் இளைஞர்கள்!

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அதனை நிறைவேற்றும் பதவிக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். மஹவிலச்சிய பகுதியில் உள்ள பிள்ளைகள் ஹேரோயின் மற்றும் போதைப்பொருள்களுக்கு பலியாகுவதனை தடுப்பதற்காக 5 இளைஞர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளனர். தங்கள் தன்னார்வமாக இந்த பதவியை ஏற்றுக் கொள்வதாக மஹவிலச்சிய கிராமத்தை சேர்ந்த 5…