ராஜபட்சவை சந்திப்பதை தவிர்த்த பிரதமர் மன்மோகன் சிங்

mahinda_manmohan001ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.

வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற ராஜபட்ச, இலங்கை திரும்புவதற்கு முன்னதாக, மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்ற எண்ணத்தில் அவரது வருகைக்காக நியூயார்க்கில் காத்திருந்தார்.

ஆனால், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துவிட்டு நியூயார்க் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், குறிப்பிட்ட நேரத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்ததால், வேறுவழியில்லாமல் அவரை சந்திக்காமலேயே அதிபர் ராஜபட்ச புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மன்மோகன் சிங், அதிகாரபூர்வமற்ற முறையில் இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்திக்க விரும்பவில்லை என்றும் அதன் காரணமாகவே அவர் வாஷிங்டனிலிருந்து சில மணிநேரம் தாமதமாக நியூயார்க் வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

TAGS: