தியாகு, உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: தா.பாண்டியன் கோரிக்கை

t pandianசென்னை, அக்.11-  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முற்போக்கு சிந்தனையாளரும், தமிழ் ஆர்வலருமான தோழர் தியாகு, தொடர்ந்து 8-ம் நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவது வேதனையைத் தருகிறது.

thiyaguஇந்திய அரசு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என, தமிழ் மக்களும், இலங்கைத் தமிழ் மக்களும் கோரிக்கை வைத்ததை நிராகரித்து, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

தமிழ் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் தியாகு, தமிழ் மக்களும், பல கட்சிகளும், அதே கோரிக்கையை வலியுறுத்தி வருவதால் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி விட்டு, மக்களின் பேரியக்கத்தோடு கலந்து போராட முன்வர வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

TAGS: