மக்களிடம் செருப்படி வாங்கும் காங்கிரஸ்: மோடி தாக்கு

narendra_modi_001சத்தீஸ்கர் மாநில ராய்பூரில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரமுள்ள கோர்பா தொகுதியில் பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திரமோடி கருத்து வெளியிடுகையில்,

ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நூறே நாட்களில் விலைவாசியை குறைத்து விடுவோம் என்று சவால் விட்டனர்.

அவர்கள் ஆட்சிக்கு வந்து 4 1/2 ஆண்டுகள் ஆகியும் தலைவிரித்தாடும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை.

சத்தீஸ்கரில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் இந்த மண்ணை மிதித்ததில்லை. ஓட்டளித்த மக்களை திரும்பி கூட பார்த்ததில்லை.

தப்பித் தவறி காங்கிரஸ் தலைவர்கள் மக்களை சந்திக்க சென்றாலும் செருப்பை தூக்கி காட்டி மக்கள் அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: