தீவிரவாதி தாசீன் அக்தரின் தலைக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்!

patnaஇந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி தாசீன் அக்தர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிகார் மாநிலம் புத்த கயை மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் பிகாரைச் சேர்ந்த தாசீன் அக்தர் என்ற மோனு, ஜார்க்கண்டை சேர்ந்த ஹைதர் அலி என்ற அப்துல்லா, நுமான் அன்சாரி, தெஃபீக் அன்சாரி, மொஜிபுல்லா ஆகிய 5 தீவிரவாதிகளையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் போலீஸார் தேடிவருகின்றனர்.

TAGS: