அயல் நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது: உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே

susilkuar_shinde_001அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழ்நிலையை இந்தியா விரும்புகிறது. அவற்றின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியிலுள்ள அகவுரா என்ற இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஷிண்டேவும், வங்கதேச உள்துறை அமைச்சர் மொய்தீனும் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த ஷிண்டே,

“அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழ்நிலையையே இந்தியா எப்போதும் விரும்புகிறது. அவர்களின் உள் விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது’ என்று கூறினார்.

TAGS: