தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் இல்லை: நாராயணசாமி

narayanasamyதமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் கிடைப்பது இல்லை என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் கிடைப்பது இல்லை.

மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை செய்து தரமுடியும்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது. அரசியல் ஆதாயத்துக்காகவே தமிழக அரசியல் கட்சிகள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றன என்று நாராயணசாமி கூறினார்.

TAGS: