இந்து முன்னணித் தலைவர்களுக்கு மீண்டும் மிரட்டல்

muslim terrorist01இந்து முன்னணித் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறி சென்னையில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு வந்த ஒரு மர்ம கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு சனிக்கிழமை ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடித்ததில் இந்து முன்னணித் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை பார்த்து அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 எனது பெயர் பாட்ஷா, நான் சில தீவிரவாத இயக்கங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவன்.

இந்து இயக்க நிர்வாகிகளை கொலை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் மேலும் 9 இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு இதற்காக 27 பேர் வந்துள்ளனர். இவர்கள் சென்னை,தாம்பரம்,திருவள்ளூர் போன்ற இடங்களில் தங்கியுள்ளனர்.

இந்து இயக்கத் தலைவர்களைக் கடத்தி கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தாம்பரத்தில் 4 பேரை பின்தொடர மட்டும் 5 பேர் தங்கியுள்ளனர். மேலும் இவர்கள் சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டு வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு சில இயக்கத் தலைவர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்தக் கடித்ததை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் குறித்து இந்து முன்னணி நிர்வாகி மனோகரன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TAGS: