தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸை தூக்கி எறியுங்கள்! ஜெயலலிதா

jayaதுரோகம் செய்யும் காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெறியுங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு தவறான கொள்கைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு பெருகிவிட்டது. இதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவது தான் முக்கிய காரணமாகும்.

அரசு நிர்ணயித்து வந்த பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியதால் அந்நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துகிறது.

இதன் காரணமாகவே பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது மட்டுமன்றி காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்கள் விவகாரம் மற்றும் ஈழத்தமிழர் விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது.

அத்தகைய மத்திய அரசை மக்கள் தூக்கியெறியவேண்டும் . இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமது தலைமையிலான அதிமுக அரசே வழிவகை செய்ததாகவும் ஆனால் திமுக தலைவர் மு.கருணாநிதி அதை மறைத்து திமுக தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு என அவர் கூறியுள்ளார்.

TAGS: