அரசியலில் இருந்து ஒதுங்கி காந்திய வழியில் மக்களுக்கு தொண்டாற்றப் போகிறேன் : ப. சிதம்பரம்

chithamparammmபுதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் பங்கேற்று பேசிய போது இவ்வாறு அறிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தலைச் சந்தித்துவிட்டேன். 17 ஆண்டுகள் அமைச்சராக இருந்தேன். அதில் சாதாரண ஜவுளித் துறையோ வேறு  துறையோ கொடுத்திருந்தால் அமைதியாக பணியாற்றி் இருக்க முடியும், தந்ததோ நிதியும், உள்துறையும்தான். இதில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் கந்துவட்டி வாங்கியதில்லை, கட்டப்பஞ்சாயத்து, சாதிக்கலவரத்தில் ஈடுபட்டதில்லை, எம்மதமும் சம்மதம்தான் என்ற கொள்கையில் பின்வாங்கியதில்லை, பிறரிடம் சல்லிக்காசு கூட வாங்கியது கிடையாது. அடுத்த எட்டு பத்து ஆண்டுகள் வாழ்வதற்கு பெரிய பணம் தேவையில்லை. எனக்கு 68 வயதாகிவிட்டது.  எத்தனை ஆண்டுகள் இனி உடல் வலிமையோடு சுற்றி வர முடியும். மண்ணில் பிறந்தவர்கள் மண்ணுக்குத்தான் செல்ல வேண்டும். மறு ஜென்மம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. எனவே, என் உள்மனம் சொன்னபடி காந்திய வழியில் சொந்தத் தொகுதியில் தங்கி மக்களுக்கு பணியாற்றப் போகிறேன் என்றார் ப. சிதம்பரம்.

 

TAGS: