கெஜ்ரிவாலுக்கு நபர் ஒருவர் குத்து விட்டதால் பரபரப்பு !

kejrival_politics_001டெல்லி பிரசாரத்தில் ஈடுபட்ட  கெஜ்ரிவாலுக்கு நபர் ஒருவர் குத்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் 49 நாட்கள் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் நாடு முழுவதும் லோக்சபா தேர்லுக்கு ஆதரவு திரட்டி ஓட்டு சேகரித்து வருகிறார்.

தெற்கு டெல்லி பகுதியான தட்சிணபுரியில் இன்று திறந்த வேன்மூலம் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது கேஜ்ரிவாலின் பின்புறம் நின்று கொண்டிருந்த ஒரு நபர் கெஜ்ரிவாலின் கழுத்து பகுதியில் இரண்டு குத்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியுற்ற கெஜ்ரிவால் நிலை குலைந்தார். இதனை பார்த்த அவரது தொண்டர்கள் அந்த நபரை அடித்து துவைத்து பொலிசிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் நடந்ததை அடுத்து கெஜ்ரிவால், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம், அந்த நபரை பழி தீர்க்கும் எண்ணத்தில் தாக்குதல் நடத்தக்கூடாது என தொண்டர்களிடம் கேட்டு கொண்டார். இதனையடுத்து இன்றைய பிரசாரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கெஜ்ரிவால் கடந்த மாதம் வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்ட போது அவர் மீது கறுப்பு மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS: