மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ராகுல் காந்தி உறுதி

rahul-gandhiஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் இன்று நடந்த காங்கிரஸ் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெரும் சவாலாக இருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் முன்னுரிமை தரப்படும்.

தமிழக மீனவர்கள் நலனில் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

TAGS: