முள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் – பழ. நெடுமாறன்!

nedumaranமுள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழர்கள் மற்றும் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார்.

தமிழகத்திலும் பிறமாநிலங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களும் மாணவர்களும் அன்று மாலை 5 மணிக்கு ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தவிருக்கும் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொள்ளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள

(பழ. நெடுமாறன்)
தலைவர்

 

தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு தா பாண்டியன்அழைப்பு!

பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்   தமிழ் நாடு மாநில செயலாளர்  தா பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.

TAGS: