டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்க வேண்டும்: அல்கொய்தாவின் காணொளியால் பரபரப்பு

terror_threat_001இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்த காஷ்மீர் இளைஞர்களுக்கு அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்கொய்தாவின் மூத்த தளபதிகளில் ஒருவரான மெளலானா ஆசிம் உமர் என்பவர் ”காஷ்மீர் முஸ்லிம்களுக்கு” என்ற தலைப்பில் பேசிய காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த காணொளியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா நிர்வாக காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் அல்கொய்தாவில் இணைய வேண்டும்.

மேலும், ஈராக்கிலும் சிரியாவிலும் நமது சகோதரர்கள் மேற்கொண்டு வரும் பாதையை பின்பற்றி இஸ்லாமிய தேசத்தை காஷ்மீர் முஸ்லிம்கள் இளைஞர்கள் கட்டி எழுப்ப வேண்டும்.

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஆயுதமேந்தி புனிதப் போரை நடத்தி வருகின்றனர். தற்போது நாம் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி முன்னேறுவோம்.

மேலும், டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்க வேண்டும், பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியின்படி காஷ்மீர் விடுதலையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் இளைஞர்கள் புனிதப் போர் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TAGS: