சுரேஷ்குமார் படுகொலை : தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியல்

ramaஇந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்த சுரேஷ் குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்து முன்னணியினர் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை அமைந்தகரையில் இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய சாலை மறியலின் போது வழிபாட்டுத்தலம் மற்றும் வணிக வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமைந்தகரையில் 5 பேருந்துகள், 2 வேன் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை பூந்தமல்லி சாலையிலும் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை தவிர, வேலூர், திருப்பூர், மதுரை, கரூர், நாகை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

TAGS: