மீண்டும் ஒரு வாய்ப்பளியுங்கள்: கெஞ்சுகிறார் கேஜ்ரிவால்

aravaind_kejerwalதில்லி ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒரு முறை எங்களுக்குத் தந்தால் நிச்சயமாக 5 ஆண்டுகளும் முழுமையாக ஆட்சி நடத்துவோம் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

தில்லியில் இன்று பொதுமக்களிடையே பேசிய கேஜ்ரிவால், தில்லியில் தற்போது நிலவும் தண்ணீர் மற்றும் மின்சார பிரச்னைகளுக்கு தற்போதைய மத்திய அரசு தான் காரணம். அதனை உடனடியாக தீர்க்க இந்த அரசுக்கு திறனில்லை. இவர்களும் முந்தைய அரசு போலத்தான் இருக்கிறார்கள்.

இந்த முறை தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் ஆம் ஆத்மியே பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

TAGS: