பாக்கு நீரிணையில் “இந்தியா” என்ற பெயர்ப் பலகை

palk_strait_001தென் பாக்கு நீரிணையின் 5வது தீவுப் பகுதியில் “இந்தியா” என்ற மற்றுமொரு பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் செல்வதை தடுக்கும் நோக்கிலேயே இந்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாக மண்டபம் கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மண்டபம் மாவட்ட நிர்வாகி கே நந்தகுமாரின் பணிப்பின்பேரில் இந்த பலகை நிறுவப்பட்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் பொறிக்கப்பட்ட இந்த பெயர்ப் பலகையை தூரத்தில் இருந்தும் மீனவர்கள் வாசித்தறிய முடியும்.

எனினும் இந்த பெயர்ப் பலகையால் தமக்கு பயன் இல்லை என்று தமிழன மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை கிலோமீற்றர் தூரத்துக்கு கூட இந்த பலகையை அவதானிக்க முடியாது என்று மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

TAGS: