தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ

mahinda_sad_002இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே குறித்த படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் 72 படகுகளுடன் 78 மீனவர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தமக்கு பிரச்சினைகளை கொடுக்குமாக இருந்தால், மீன்பிடித்தொழிலை விட்டு மாற்றுத்தொழில் குறித்து ஆராய வேண்டியிருக்கும் என்றும் தமிழக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

TAGS: