தமிழக அரசின் 3வது அவதூறு வழக்கு : சுப்ரமணியன் சுவாமிக்கு மீண்டும் சம்மன்

தமிழக அரசு தொடர்ந்த 3வது அவதூறு வழக்கில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மனு மீதான விசாரணைக்கு வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக தமிழக அரசு நேற்று 3வது அவதூறு வழக்கை பதிவு செய்தது.

ஏற்கனவே தாக்கல் செய்த 2 அவதூறு வழக்குகளிலும் அக்டோபர் 30ம் தேதி ஆஜராக சுப்ரமணியன் சுவாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: