டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற புலி

tigerபுதுடில்லி: டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக தடுப்புகட்டையையும் தாண்டி படம் எடுக்க முற்பட்டார். இந்நேரத்தில் கவனக்குறைவால் கூண்டுக்குள் விழுந்தார். இதனை பார்த்த புலி தனக்கு ஏதும் இடையூறு செய்யத்தான் வருகிறாரோ என்ற பீதியில் புலி இந்த வாலிபரை கடித்து தர,தர வென இழுத்து சென்றது. இதனை பார்த்த நண்பர்கள் கதறி குரல் எழுப்பினர். ஆனாலும் புலி விடவில்லை. கடித்து குதறியது. இதில் இந்த நபர் ரத்தக்காயங்களுடன் துடி, துடித்து இறந்து போனார்.

இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

TAGS: