காஷ்மீரில் இந்திய- பாக். படைகள் மோதல்; 9 பொதுமக்கள் பலி

soldeir_jammuசர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

இந்திய பகுதி கிராமங்களைச் சேர்ந்த 5 பேரும் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த 4 பேருமாக 9 பொதுமக்கள் இந்த மோதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

2003-ம் ஆண்டில் இருநாடுகளும் கைச்சாத்திட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை மீறுகின்ற மோசமான சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது.

இரண்டு தரப்பிலுமுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஈத் பண்டிகையை கொண்டாடுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த மோதல்கள் வெடித்துள்ளன.

கோபமூட்டும் செயல்கள் எதிலும் தாம் ஈடுபடாத போதிலும், மற்ற தரப்பிலிருந்தே துப்பாக்கிப் பிரயோகம் தொடங்கப்பட்டதாக இரண்டு தரப்புகளும் மாறிமாறி பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன. -BBC

TAGS: