தமிழக மீனவர்களுக்கு தூக்கு: மனிதாபிமானத்துக்கு விடுக்கப்பட்ட சவால்…கொந்தளித்த கமல்ஹாசன்

kamalhassan_001தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலரை சிங்கள கடற்படை கைது செய்தது.

இவர்களில் 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர்கள் மீது பொய்யான வழக்குகளைச் சுமத்தி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தூக்கு குறித்து நடிகர் கமல்ஹாஸனிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பிய போது, இதற்கு பதிலளித்த கமல்ஹாஸன், இதைவிடக் கேவலம், மனித உரிமை மீறல் எதுவும் இருக்காது.

இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கும், மனித குலத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்றும் இந்திய அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தி 5 உயிர்களையும் காக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இல்லையென்றால், இங்கு அரசு என்ற ஒன்று இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.