செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தமிழகத்தைச் சேர்ந்த 38 பேர் கைது

redsandalசெம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 38 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவின் சந்திரகிரியிலிருந்து தமிழகத்திற்கு செம்மரங்கள் கடத்தப்படுவதாக, திருப்பதி புறநகர் எஸ்.பிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, டிஎஸ்பி இலியாஸ் பாஷா தலைமையிலான போலீசார், முத்தியாள ரெட்டி பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது செம்மரங்களைக் கடத்தி வந்த 38 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட, 1 லாரி, 3 கார், 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 38 பேரும், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. -http://www.nakkheeran.in

TAGS: