எல்லைப் பிரச்சனை! சீனாவுடன் பேச்சு நடத்த சிறப்பு அதிகாரியை நியமித்தார் பிரதமர் மோடி!

india_china_map_20121022இந்தியா சீனா இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சனை குறித்து, சீன அதிகாரிகளுடன் விவாதிக்கவும், முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவும் சிறப்பு அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில் இருநாடுகளும் எல்லைப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தன.

 

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அஜித் தோவலை பிரதமர் நரேந்திர மோடி நியமித்துள்ளார்.

-http://www.nakkheeran.in
TAGS: