“இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எதிரிப்படையாக பார்க்கிறது”

indian_fishersஇந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்ற தமிழக மீனவர் படகுகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததாகக் கூறுகிறார் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் செயலாளர் போஸ்.

இன்றைய சம்பவத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இருபது படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகவும், இரண்டுபடகுகளை மூழ்கடிக்கும் நோக்கில் கடற்படை படகுகளைக்கொண்டு தாக்க முயன்றதாகவும் போஸ் கூறினார்.

ஏதோ எதிரி நாட்டுப்படையை தாக்கி மோதுவதைப் போல இலங்கை கடற்படை தமிழக மீன்பிடி படகுகளையும் மீனவர்களையும் நடத்துவதாக கூறுகிறார் அவர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசும், இந்திய அரசும் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உதவவேண்டும் என்றும் போஸ் கோரிக்கை விடுத்தார். -BBC

TAGS: