சுனந்தாவின் பணியாளர் போலீசாரிடம் வாக்குமூலம்! சசிதரூரிடம் போலீசார் விசாரணை?

sunanda-pushkarசுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூரிடம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிதரூரின் மனைவி சுனந்தா. இவர் கடந்த ஆண்டு டெல்லி நட்சித்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சுனந்தா மரணத்திற்கு அவரது உடலில் இருந்த விஷமே காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுனந்தாவின் வீட்டில் பணியாற்றிய நாராயணன், போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார். அதில், சசிதரூருக்கும் சுனந்தாவுக்கும் பணம் தொடர்பாக அடிக்கடி சண்டை வரும் என்றும், பெண் ஒருவர் தொடர்பாக சண்டை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சுனந்தாவின் நண்பர்கள் உட்பட 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதேபோல், சசிதரூரிடம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

-http://www.nakkheeran.in

 

TAGS: