இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவு ஏற்படுத்த அமெரிக்கா சதி: சீனா குற்றச்சாட்டு

 இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்  பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லி கெகியாங் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தனித்தனியாக விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம், இந்திய-சீன உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தாங்கள் நம்புவதாகவும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவு ஏற்படுத்த நினைக்கிற அமெரிக்கச் சதிக்கு இந்தியா இரையாகிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியாவும், சீனாவும் பழமையான நாகரிகத்தை கொண்டவை. இந்தியாவின் சாதனைகள் மற்றும் வளர்ச்சியில் சீனா பெருமகிழ்ச்சி கொள்கிறது. அமைதி மற்றும் வளர்ச்சியில் உயர்மட்டநிலையை அடைய செய்வது தொடர்பாக ஒத்துழைப்பு நட்புறவை மேம்படுத்த இந்தியாவுடனான ஒருங்கிணைந்த முயற்சிகளை செய்ய சீன விரும்புகிறது என ஜின்பிங் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் நட்பு பாராட்டுவது, (சீனாவின் டிராகன் மற்றும் இந்திய யானை) சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையே நிரத்தரப் பகையை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் சதி வேலையாகும் என்று சீன பத்திரிகை கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

அந்த கட்டுரையில்   ஆசியாவில் முன்னிலை” என்று அமெரிக்காவின் தந்திரத்திற்கு ஆதரவை பெருவதற்கு அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக மாற்றிக்கொள்ள கொள்கை தளர்வுகளை செய்துள்ளது. சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக்க வரலாற்று சிக்கல்களில் வேறுபாடுகளை களைந்து பெரும் முயற்சி எடுத்து வருகிறது என்று மேற்கத்திய மீடியாக்களில் வெளியாகிய செய்திகளை குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக்க வரலாற்று சிக்கல்களில் வேறுபாடுகளை களைந்து பெரும் முயற்சி எடுத்து வருகிறது என்று மேற்கத்திய மீடியாக்களில் வெளியாகிய செய்திகளை குறிப்பிட்டு சீன பத்திரிக்கை கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: