டெல்லி: சீன தூதரகம் முன்பு திபெத்தியர்கள் போராட்டம்

Exile Tibetan childசீன ஆட்சிக்கு எதிராக 1959-ம் ஆண்டு தொடங்கிய கிளர்ச்சி நினைவு தினத்தை திபெத்தியர்கள் இன்று கடைப்பிடித்தனர்.

இதையொட்டி, டெல்லியில் உள்ள திபெத்தியர்கள் சீன தூதரகத்துக்கு வெளியே திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது தீபெத்திய கொடி, போஸ்டர்கள், தீபெத்தை விடுவியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஆகியவற்றை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சில திபெத்தியர்கள் தங்கள் முகங்களில் கருப்பு நிற மாஸ்க்குகள் அணிந்துகொண்டும் திபெத்திய கொடியை வரைந்து கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், சிறிது நேரம் கழித்து விடுதலை செய்தனர்.

-http://www.nakkheeran.in

TAGS: