நாகலாந்தில் மீண்டும் மக்கள் காமக் கொடூரன் ஒருவரை அடித்தே கொன்றுள்ளார்கள் !

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் , பள்ளி மாணவி ஒருவரை கற்பழித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட நபரை மக்கள் போலிஸ் நிலையம் புகுந்து வெளியே இழுத்து வந்து அடித்தே கொலை செய்தார்கள். இந்த பரபரப்பு ஓயாமுன்னரே அடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

11 வயது சிறுமி ஒருவரை கற்பழித்த நபரை அந்த ஊரில் இருந்த இளைஞர்கள் பிடித்து கட்டி வைத்து அடித்தே கொன்றுள்ளார்கள். சுமார் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அடித்து , இவ்வாறு கொலை செய்யும்வரை அந்த இடத்திற்கு போலீசார் ஏன் வரவில்லை ? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதுபோக இந்த வீடியோ இன்ரர் நெட்டில் பரவி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

-http://www.athirvu.com

TAGS: