தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல்: படுகாயங்களுடன் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

fisherman05கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் மீது இன்று இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு ஐந்து ரோந்துப் படகுகளில் வந்த கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுமாறு எச்சரித்தனர். ஒரு படகில் இருந்த 5 தமிழக மீனவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கிய சிங்கள கடற்படையினர் அவர்களின் வலைகளையும் கிழித்தெறிந்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள் கனி மற்றும் கலைஞானம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-http://www.maalaimalar.com

TAGS: