ரேபரேலியில் ரயில் கவிழ்ந்து: 22 பேர் பலி; 150 பேர் காயம்

trainரேபரேலி வாரணாசியில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற வாரணாசி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில், ரேபரேலியில் விபத்தில் சிக்கியது. இதில், சம்பவ இடத்தில் 15 பேர் பலியாயினர். பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். .வாரணாசி – டேராடூன் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்று கொண்டிருந்த போது ( உ. பி., மாநிலம் ரேபரேலி அருகே பக்ராவா பகுதியில் கவிழ்ந்தது. இதில் 5 பெட்டிகள் தடம் புரண்டன சம்பவ இடத்தில் 15பேர் பலியாயினர். தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. காயமுற்ற நபர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்ஜின் கோளாறு காரணமாக ரயில் விபத்தில் சிக்கியதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

-http://www.dinamalar.com

TAGS: