மிரட்டல் எதிரொலி: பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு – மத்திய அரசு உத்தரவு

narandra-modiபிரதமர் நரேந்திர மோடி பெயரை குறிப்பிட்டு, தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக இது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது குறைந்தபட்சம் அவருக்கு 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பிரதமர் மோடி செல்லும் பாதைகளில் கண்காணிப்பை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் 9–ந் தேதி (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு செல்ல உள்ளார். கொல்கத்தாவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடிக்கு சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: