கருப்பு பணத்தை மீட்பது எப்படி? மோடிக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்

subramaniyan_002கருப்பு பணத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடந்த வர்த்தக மாநாட்டில் சுப்ரமணியன் சாமி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது பேசுகையில், கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது எப்படி என பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

கருப்பு பணத்தை கொண்டு வர இப்போது என்னென்ன செய்ய வேண்டுமோ? அது முழுமையாக செய்யப்படவில்லை.

ஆனால், விரைவில் அவை செய்து முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால், பிரதமர் மோடியின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

கருப்பு பணத்தை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கும் மசோதா வெறும் வரி ஏய்ப்புக்கான தண்டனை மட்டுமே. ஆனால், எல்லாவற்றையும் அந்த மசோதாவே செய்து விடாது.

மேலும், வெளிநாட்டு நீதிமன்றத்திடம் இருந்து கடிதத்தை பெறுதல், பிறகு அதன் மூலம் கருப்பு பணம் பதுக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் கணக்குகளை ஆய்வு செய்ய வைத்தல் என கருப்பு பணத்தை கொண்டு வர வழிகள் உள்ளன என்று பேசியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: