வான்வெளியில் திடீரென்று வந்த பறக்கும் தட்டு: மாணவன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு

ufo_001உத்தரபிரதேசம் கான்பூரில் மர்ம பொருள் பறந்து வந்ததாக மாணவன் ஒருவன் தனது மொபைல் போனில் படம் பிடித்து காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இயற்கை மீது ஆர்வம் உடைய ஒரு மாணவன் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

அப்போது மேக கூட்டங்களுக்கிடையே பறக்கும் தட்டு பறந்து வந்துள்ளது. அதை அவன் தன் மொபல் போனில் படம் பிடித்துள்ளான்.

பின்னர் புகைப்படத்தை தனது பெற்றோர்களிடம் காண்பித்து, தான் பறக்கும் தட்டை பார்த்ததாக தெரிவித்துள்ளான்.

இது தொடர்பாக அந்த சிறுவன் கூறுகையில், எனக்கு இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.

நான் மேகங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கும் போது எனது புகைபடங்களில் வட்டவடிவமாக தட்டு போல் ஒன்று இருப்பதை பார்த்தேன்.

அதை பெரிதாக்கி பார்த்த போது அது மர்ம பறக்கும் தட்டாக தெரிந்தது என்று கூறியுள்ளான்.

மாணவனின் தந்தை சந்தோஷ் குப்தா இது தொடர்பாக கூறுகையில், எனது மகன் எடுத்து புகைப்படம் உண்மையில் பறக்கும் தட்டு தான்.

நடுவில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டு, சுற்றிலும் வெள்ளை நிறத்தில் இருந்ததை பார்த்தேன்.

மேலும், நடுவில் இருந்து புகைபோன்ற ஒரு பொருள் செல்வது போல் தோன்றியது. இந்த புகைபடங்கள் உண்மையானது.

இதை எந்த சோதனை கூடங்களிலும் பரிசோதித்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: