இலங்கையில் சர்வதேச விசாரணை: சட்டசபை தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை!- சுப்பிரமணிய சுவாமி

jaya_subramaniyam_001இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இல்லை. என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி  தெரிவித்தார்.

நான் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினேன். அப்போது இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன.

மேலும் உள்நாட்டு விசாரணை குழுவில் வெளிநாட்டினர் இடம்பெறலாம் என்றும் ரணில் ஆலோசனை தெரிவித்தார். என்றார் சுப்பிரமணிய சுவாமி.

-http://www.tamilwin.com

TAGS: