இலங்கை தீர்மானம்: வாருங்கள், அனைவரும் சேர்ந்து பிரதமரை சந்திப்போம்.. ஜெ.வுக்கு அன்புமணி கோரிக்கை

anbumani345சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தீர்மானத்தை அவருக்கு விளக்கிட வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: