செம்மரக்கட்டை கடத்தியதாக 55 தமிழர்கள் கைது

semmaram_001ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக 55 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடப்பாவில் எருக்கம்பாடு வனப்பகுதியில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தியதில், 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களை பொலிசார் சுற்றி வளைத்த போது அவர்களில் சிலர் தப்பி ஓடியுள்ளனர்.

மேலும், அவர்களில் 55 தமிழர்கள் பொலிசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

-http://www.newindianews.com

TAGS: