செல்போன் தான் பாலியல் பலாத்காரம் அதிகரிக்க காரணம்: ஆசம் கான்

செல்போன்கள் தான் பாலியல் பலாத்காரத்திற்கு காரணம் என உத்தரபிரதேச அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம்கான் தெரித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

செல்போன்கள் மூலம் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. இளைய தலைமுறையினரிடம் மோசமான தகவல்களை பரப்புவதில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிராம மக்கள் கூட எளிதாக ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்யும் அளவிற்கு மொபைல் போன்கள் வாய்ப்பளிக்கிறது. இது மிகவும் வருந்தக்கூடிய விஷயமாக மாறி வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: