தமிழக மீனவர்களை பாதுகாக்க 24 மணித்தியால கண்காணிப்பு: இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவு

sarma_001தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்கும் வகையில் 24 மணித்தியால கண்காணிப்பு பணியில் தாம் ஈடுபட்டு வருவதாக இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் சர்மா தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மற்றும் மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு அங்கமாக 24 மணித்தியாலங்களும் கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் இந்திய கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்றைய தினம் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: