மது விற்பனை செய்யும் ஆட்சியாளர்களிடம் மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் மிகப்பெரிய சீர்கேடாக மது உருவெடுத்திருக்கிறது. மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதைத் தான் கோவன் அவரது பாடலில் விவரித்திருக்கிறார். கோவனின் பாடலில் உள்ள சில ரசனைக் குறைவான வார்த்தைகளை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் மதுவால் தமிழ்நாட்டில் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் உண்மையானவை. இந்த உண்மையை கூறியதற்காக ஒருவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. அடுத்தகட்டமாக கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இது மனிதத் தன்மையற்ற செயலாகும். மது விற்பனையையே கடமையாகக் கொண்ட ஆட்சியாளர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.
தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாக கூறி மாறி மாறி ஆட்சி செய்யும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மதுவைக் கொடுத்து மக்களுக்கு செய்த தீமைகள் மன்னிக்க முடியாதவை. டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மதுவைக் கொடுத்து பறித்திருக்கிறார்கள். தமிழக அரசே மது விற்கத் தொடங்கியதற்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை சரி செய்வதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மக்களால் செலவிடப்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 28 லட்சம் பேர் மது போதையால் இறந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கைம்பெண்கள் ஆன கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிறுவர்களும், பெண்களும் புதிதாக மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.
மது விற்பனையால் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், அதனால் பயனடைபவை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான். காரணம் தமிழகத்தில் விற்பனை செய்யப் படும் மதுவில் 80 விழுக்காட்டை தயாரிப்பவை இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் தான். மது போதைக்கு மக்களை அடிமைகளாக்கிய இரு கட்சிகளும் அதன் மூலம் கிடைக்கும் பணத்திற்கு அடிமையாகி கிடப்பதால் ஒரு போதும் அக்கட்சிகளின் அரசுகள் மதுவிலக்கை கொண்டுவராது. மாறாக, மதுவுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்குவதில் தான் கவனம் செலுத்தும்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே மதுவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வின் பயனாக மதுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், உளவுத்துறை மூலம் சில அரசியல் கட்சிகளின் உதவியுடன் அந்த போராட்டத்தை தமிழக அரசு திசை திருப்பி மழுங்க அடித்தது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசுகள் இதைத் தான் செய்யும்; இதைத் தான் அவர்களால் செய்ய முடியும். அக்கட்சிகளால் போராட்டங்களையும், போராட்டக் காரர்களையும் ஒடுக்கத் தான் முடியுமே தவிர, மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.
அதே நேரத்தில், மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய யாரால் முடியும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மக்கள் தங்கள் உணர்வை வாக்குகளாக வெளிப்படுத்தும் போது மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த சக்திகள் மண்ணை கவ்வுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-http://www.nakkheeran.in
Maram vetti mandayan
மது மட்டுமல்ல சாதியை வைத்து வயிறு பிழைக்கும் அரசியலவாதியும் மனிதத்தன்மைக்கும் நேர்மைக்கும் அருகதை அற்றவர்கள் .
மது மட்டும் அல்ல ,சாதியை வைத்து பிழைக்கும் அரசியல்வாதியும் தமிழினத்தின் எதிரியே
மது விற்பனை அதிகரிக்கவில்லை என்றால் உங்களுடைய ஜாதி சங்கம் வளர்ச்சி பெறாதே!
உயிர் கொல்லி மதுவை வைத்து பிழைக்கும் அந்த லஞ்ச ஊழல் அரசியல் வாதிகளை விட இந்த ஜாதியை ( உண்மையாயின் ) வைத்து அரசியல் செய்வது எவ்வளவோ மேல் .
தமிழனல்லாத மற்ற இனத்தவன் தமிழகத்தை ஆட்சி செய்வது தமிழனுக்கு எப்பொழுதுமே பெருமை போலும் …தமிழகத்தில் மட்டும் தான் இந்த வெட்ககேடு ……மற்ற மாநிலங்களை பொய் பாருங்கடா….வேட்கங்ககெட்ட ஈனபயன்களே …..இந்த 50 ஆண்டு கால ஆட்சியில் , திராவிடன் என்ற போர்வையில் எப்படி தமிழன் அல்லாத ஈன நாய்கள் தமிழ்நாட்டை ஆண்டு தமிழனை அடிமை படுத்தி சுக போகங்களை அனுபவித்து கொடிருகின்றன பொய் பாருங்கடா …
தமிழ் நாட்டை தமிழ் வேண்டும் என்று சொன்னால் அவன் ஜாதி வைத்து கொண்டு பிழைக்கிறான் என்று அடைமொழி …ஈன பயல்களே மூளை இருந்தால் தன மானத்தோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள் ……தமிழ் நாட்டை தமிழன் ஆழ வேண்டும் …..உதவ முடியாவிட்ல் “மூடி” கொண்டு இருக்கவும்
அரசியல் வாதிகளை குறை சொல்வதும் சில நேரங்களில் சரியாக இருக்காது– தமிழ் நாட்டு மக்களுக்கு சமூக அறிவுவும் இனப்பற்றும் மொழிப்பற்றும் மிக மட்டம்– தமிழ் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தால் புரியும்– இவ்வளவு மட்டமானவர்களா – மிகவும் கேவலம். தமிழ் மொழியை கொலை செய்து நார அடித்து அதைப்பற்றி அக்கறையே இல்லாத ஈன ஜென்மங்கள். வீதிக்கு வீதி சிலைகளையும் அட்டை அரசியல் விளம்பரம் களுமே எங்கு பார்த்தாலும் –இதெல்லாம் தேவையா? புகழ் பாடியே வயிர் வளர்க்கும் ஜால்ராக்கள். சிங்கப்பூரின் லீ குவான் இயு எவ்வளவோ செய்து ஒன்றுமில்லா அந்நாட்டை உலக தரத்திற்கு உயர்த்தி இருந்தாலும் லீ குவான் இயுவின் படங்களையோ சிலையையோ எங்காவது வெளியே பார்க்க முடியுமா? இதிலிருந்து புரிய வேண்டும் நம் இனத்தின் மதி கெட்ட ஜால்ரா தனம். இதை பற்றி பேசவே கூசுகிறது, தற்போது வரும் திரை படங்களில் குடிதான் மிகவும் முக்கியம்– மரியாதை இல்லாமல் அநாகரிகமாக நடப்பது தான் இப்போது -பேஷன்.
வள்ளுவனைப் போற்றும் திராவிடக் கட்சிகளுக்கு வள்ளுவன் கள்ளுண்ணாமைப் பற்றிச் சொன்னதைப் பின்பற்றத் தெரியவில்லையே? எல்லாம் அந்த உடையார் மயம்தான். தேர்தலுக்கு இந்த திராவிடக் கட்சிகளுக்கு வரும் பண வங்கியை அடைக்க வேண்டுமானால் மது விற்பவர்களை அடக்க வேண்டும். அதனால்தான் மருத்துவர் இராமதாஸ் மது கடையை அடைக்கச் சொல்லுகின்றார். தமிழ் நாட்டுத் தமிழன் கெட்டாலும், பிறரை வாழவைக்க மதுக்கடை அவசியமே!. என்றைக்குத் தமிழன் கள்ளை மறந்து, தன்னைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றானோ அன்றைக்கே பிறருக்கு ஆப்பு என்று தெரிந்துதான் வள்ளுவன் வார்த்தையையும் புறங்கட்டி விட்டார்கள் திராவிடர்கள். வாழ்க திராவிடம், ஒழிக தமிழர் என்று நாங்கள் கொடி பிடிப்போம் என்று நம்பாதே திராவிடமே!
தமிழன் உருப்பட மது ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .ஆனால் தமிழன் சாதியில் பிரிந்து கிடக்கும்போது மற்ற மாநிலத்தவன் நம்மை அடக்கி ஆள்வது எளிதாகி விடுகிறது .தமிழ் இன உணர்வால் ஒன்றுபடும் போதுதான் நம் தலைவிதியை நம்மால் தீர்மானிக்க முடியும் .
தமிழன் என்ற உணர்வு முதலில் அணைத்து தமிழனுக்கும் வரவேண்டும். அதற்காக முதலில் தமிழன் (100%) ஆழ வழி காண வேண்டும். இதுவே ஒற்றுமையின் முதல் படி. இது நடந்தால் மற்றவன் நம்மை பிரித்தால முயல இயலாது. திராவிட போர்வையில் உள்ள அரசியல் நரிகளே தமிழனை ஒன்றுபடாமல் இருக்க சாதி மற்றும் மது போன்றவையின் மூலம் பிரிதாளுகின்றன .
ப ம கா சாதி கட்சி என்றும் கூறும் நரிகள் தங்கள் கட்சிகளில் சாதி ஆளுமை இல்லை என்று சொல்ல முடியுமா ?
அவைகளுக்கு தெரியும் ப ம கா வென்றால் தங்கள் கட்சிகள் தலையெடுக்க இயலாது என்று .
சாதி கட்சி என்று சொல்லப்படும் ப ம கா தான் முன்பு மத்திய ஆட்சியில் இருந்த பொழுது போலியோவை ஒழித்து , இந்தியாவில் அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்தது , புகைப்பதை தடுக்க சட்டம் இயற்றியது . இவைகளை பாராட்டி பல உலக அமைப்புகள் WHO உட்பட வாழ்த்துகள் நேரிடையாக தெரிவித்தன ….இன்னும் பல. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் உருப்படாதோ ? ஆம் இவை எல்லாம் ஒரு சில சாதிகளுக்கு மட்டுமே செய்யப்பட்டவை போலும் ….தெரிந்து எழுதினால் நல்லது. கண்மூடித்தனமாக 50 ஆண்டுகள் தமிழர்களை ஏமாற்றிய திராவிடம் என்னும் போர்வையில் உள்ள குள்ள நரிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம் ……