திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசினால், கொல்லப்படுவாய்! பேஸ்புக்கில் மிரட்டல்

pratap_simha_001திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசினால், கொல்லப்படுவாய் என மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

திப்புசுல்தான் சுதந்திர போராட்ட தியாகி கிடையாது,தேச துரோகி என்று கர்நாடக பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், ‘மைசூர் ஹுலி சாஹிதே மிலாத் மஹான் திப்பு சுல்தான்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பாஜக எம்.பி-க்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா கலந்துகொண்ட விழா ஒன்றில், திப்புசுல்தான் தேச துரோகி என்பது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்தே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் குடகு மாவட்டம் மடிகேரியில், திப்பு பிறந்த நாள் விழாவை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்த விஹெச்பி தலைவர் குட்டப்பாவின் சடலத்தின் படத்தையும், பிரதாப் சிம்ஹா படத்தையும் அருகருகே வைத்து, திப்பு பற்றி தப்பாக பேசினால், குட்டப்பாவுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ஏற்படும்.

குட்டப்பா கால் தவறி விழுந்ததாக மாநில அரசு தப்பாக கூறுகிறது. அவரை கொலை செய்ததுபோல, உனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கன்னடத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு தற்போது பொலிசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: