புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவன், மழை வெள்ளம் குறித்து பாடிய பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடியதற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கோவன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவனை வரவேற்க, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் உறுப்பினர்கள் கூடியிருந்தனர்.
வெளியே வந்தவர் உறுப்பினர்களுடன் சேர்ந்து, மழை வெள்ளம் குறித்து பாடலை பாடினார்.
ஊரெங்கும் மழைவெள்ளம்
தத்தளிக்கிறது தமிழகம்
இது யாரோட குத்தம்னு
கேட்காத சிறைவாசம்!
சாக்கடை ஊட்டுக்குள்ளே
போக்கிடம் ஏதுமில்லே…
பாக்க வந்த அம்மாவோட
காரு கூட நனையவில்லை..
பொங்கித் தின்ன வழியில்லை
பொட்டலம்தான் கதியில்லை
போயஸ் ராணி ஆட்சியில
போட்டோவுக்கு குறைச்சல் இல்ல…
தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி
தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி
தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி
தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி
-http://www.newindianews.com
தமிழகம் அன்றிலிருந்து இன்றுவரை “தண்ணியில்தான் ” மிதந்து கொண்டிருக்கிறது.