ஒட்டுமொத்த வரிசையில் தமிழகம் பின்தங்கி விட்டது!

jayjay*  கேரளா, கர்நாடகா முந்திக்கொண்டுஇருக்கிறது
*  வளர்ச்சியில் அசத்துகிறது அசாம், ஒடிசா
*  பக்கத்து புதுச்சேரியும் வியக்க வைக்கிறது
*   ‘தள்ளாடும்’ தமிழகமோ தத்தளிக்கிறது

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த சீரான வளர்ச்சியில் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை தரமும் உள்ளது. மாநில அரசின் அக்கறையின்மை, அலட்சியம், திடமான நடவடிக்கை இல்லாதது போன்ற காரணங்களால் வளர்ச்சி பாதிக்கப்படும் போது, அது தான் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கை என்று ஒவ்வொரு முனையிலும் பாதிப்பை புற்றீசல் போல பரவ காரணம் ஆகிறது. சாலை வசதி, மின்சார உற்பத்தி, குடிநீர் வசதி, தொழிற்சாலைகள் அமைத்தல், உற்பத்தி அதிகரிப்பு என்று எல்லா வகையிலும் ஒரு மாநிலம் உயர்ந்திருப்பது முக்கியம். விவசாயம், நல்ல நிர்வாகம், ஏழைகள் அளவில் கூட பரவும் பொருளாதார மேன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், தூய்மை என்று பத்து அம்சங்களில் எடுத்த சர்வேயில், குஜராத்  முதலிடத்தை பிடித்துள்ளது.  தென் மாநிலங்களில் கேரளாவை பற்றி கேட்கவே வேண்டாம். தமிழ்நாட்டுக்கும் அந்த மாநிலத்துக்கும் தான் கல்வியில் போட்டாபோட்டியே. ஆனால், இன்றைய நிலை  என்ன? கல்வியில் கூட நாம் பின்தங்கி விட்டோம்.  கல்வியில் மட்டுமல்ல,  எல்லா துறைகளிலும் ஒட்டுமொத்த வரிசையில் மூன்றாவது இடத்தில் கேரளா.

பெரிய மாநிலங்களில் பாராட்டத்தக்க மாநிலம் என்றால் அசாம் தான். 19வது இடத்தில் இருந்தது ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதுபோல, ஒடிசா; 16வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு வேகமாய் ஏறியுள்ளது. இரு மாநிலங்களுக்குமே விவசாயம், கட்டமைப்பு வசதிகள், ஏழைகளின் பொருளாதாரம் உயர்ந்திருப்பது போன்றவை தான் கைகொடுத்துள்ளன  என்றால் மிகையல்ல.  பெரிய மாநிலங்களில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள மாநிலம் எது என்று சொல்லவும் வேண்டுமா? தமிழ்நாடு தான். முதலிடத்தில் இருந்தது எல்லாம் போய், 20வது இடத்துக்கு, அதாவது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கைவிட்டது விவசாயமும், சாலை மேம்பாடு, நிதி நிர்வாகம் உட்பட கட்டமைப்பு வசதிகள் தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்ைக தரம் உயர வேண்டுமானால், அதன் தலைமை திறமையாக முழுப்பங்காற்ற வேண்டும்; மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் மனப்பான்மை வேண்டும்; எல்லா துறைகளிலும் வளர்ச்சி காண, இரவு, பகலாக திட்டங்கள் போட்டு, சிறிய தவறுகள் கூட நடக்காமல், எந்த முறைகேடும் இல்லாமல் 100 சதவீத பலன்களை மக்களுக்கு தரும் வகையில் செயல்பட வேண்டும்.

குஜராத் போன்ற பெரிய மாநிலங்களை பொறுத்தவரை கட்டமைப்பு வசதிகள், விவசாயம் போன்றவற்றில் திடமான, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் முன்னணி இடத்தை தக்க வைத்து கொள்ள முடிந்தது.

மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளிடம் இருந்து தொகுத்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள், தகவல்கள், கட்டமைப்பு வசதிகள், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல் உட்பட 10 அம்சங்கள்  அடிப்படையில் இந்த சர்வே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை தொகுத்து ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. விவசாயத்தில் உற்பத்தி  அளவு, விவசாய நிலங்கள் பரப்பு, கல்வியில் கல்வியறிவு பெற்ற மக்கள், மாணவர் – ஆசிரியர் விகிதாசாரம், பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை எண்ணிக்கை, அரசு நிர்வாகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, உள்ளாட்சிகளுக்கு உள்ள அதிகாரங்கள்,  மக்களின் சேவையில் அரசின் மின்னணு பயன்பாடு, இ – சேவைகள்,  சுகாதாரத்தில், குழந்தைகள் பிறப்பு விகிதம், பாலின விகிதாசாரம், தனி நபருக்கு அரசு செய்யும் சுகாதார செலவு ஆகியவை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோல பத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தான் தமிழ்நாடு, இருபது மாநிலங்களில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கொடுமை தெரியவந்துள்ளது. சர்வயேில் கிடைத்த தகவல்கள் படி தமிழ்நாடு எந்தெந்த துறையில் எந்த இடத்தில் உள்ளது? பார்ப்போம்: விவசாயத்தில் 21வது இடம்: விவசாயத்தில் பெரிய மாநிலங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மத்திய பிரதேசம்; சிறிய மாநிலங்களில் புதுச்ேசரிக்கு அந்த கவுரவம் கிடைத்துள்ளது. விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்  ஆக்கிரமிக்கும் இந்த  காலகட்டத்தில் விவசாய பாசன பகுதிகளை 45 சதவீதம்  அதிகரித்துள்ள பெருமை ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சேரும்.

இதுபோல, புதுச்சேரியில், 2013 – 14ல் 85 சதவீத விவசாய நிலங்களில் பயிர் செய்தது, 2014-15ல் 87 சதவீதாக அதிகரித்துள்ளது பெரும் சாதனை. மற்ற சிறிய  மாநிலங்களில் உணவு உற்பத்தி 7 சதவீதம் தான்; புதுச்சேரி 9 சதவீதத்தை எட்டியுள்ளது.   ஒட்டுமோத்த வளர்ச்சியில் 21வது இடத்தில் உள்ள உத்தரகண்ட் மாநிலம் கூட விவசாயத்தில் 12 வது இடத்தில் உள்ளது.  ஆனால், ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20வது இடத்தில் தத்தளிக்கும் தமிழ்நாடு விவசாயத்தில்  21வது இடத்தில் உள்ளது.

வெட்கப்பட வைக்கிறது சிறிய மாநிலம் சிக்கிம்

சிறிய மாநிலங்களில் முதலிடத்தை பிடித்திருப்பது சிக்கிம். வடகிழக்கில் உள்ள இந்த மலை சூழ்ந்த இயற்கை எழிலுக்கு பஞ்சமில்லாத மாநிலத்தில் ஏழைகள் வெறும் நூற்றுக்கு 8 பேர் தான்  என்றால் பார்த்து கொள்ளுங்கள். தேசிய ஏழைகள் சராசரி சதவீதம் கூட 22.   சிக்கிமில் தனி நபர் ஆண்டு உற்பத்தி திறன் 2  லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது. அதாவது, தனிநபர்களால் தான் மாநில வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. ‘ஒட்டுமொத்த வளர்ச்சியை தந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது மட்டும் தான் என் குறிக்கோள்’ என்கிறார் மாநில முதல்வர் பவன் சாம்லிங். இவர் அறிவிப்போடு விட்டுவிடவில்லை; முழு அக்கறை காட்டி முழுமூச்சுடன் செயல்படவும் செய்கிறார்;  அது தான் இவரது மாநிலம் மற்ற பெரிய மாநிலங்களை கூட வெட்கப்பட வைத்துள்ளது.

முதலீட்டில் 9வது இடம்

கடந்தாண்டு முதலீடு 61 சதவீதம் அதிகரித்துள்ளது; முதலீட்டை உருப்படியாக பயன்படுத்தி முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் ஒரே இந்திய மாநிலம் என்று உலக வங்கியால் பாராட்டப்பட்ட மாநிலம் குஜராத் என்பது  குறிப்பிடத்தக்கது.  ஒழுங்காக திட்டங்களுக்கு செயல்படுத்தாமல் இருந்துள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடும் இருப்பது வருத்தமான விஷயம். அதனால் தான், முதலீடுகள் குவிவதாக அறிவித்தாலும், அதன் விளைவாக எந்த திட்ட செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியவில்லை என்று தொழில்துறை ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக நிலை இது அறிவிப்பு  மட்டும் தான் வருது உருப்படியான வளர்ச்சி இல்லை

குஜராத் மாநிலம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க காரணம், திடமான, நீடித்த செயல்பாடுகள் தான். கல்வியில் கடந்த 2012-13 மற்றும் 2013-14 ஆண்டுகளில் மட்டும் 40 சதவீத நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.  அதுபோல, அன்னிய நேரடி  முதலீடு, இந்த ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்படியானால் வளர்ச்சி தானே மாநில அரசின் கதவை தட்டத்தானே செய்யும்.   ஒட்டுமொத்த வளர்ச்சி பட்டியலில், முதலில் குஜராத் இருந்தாலும், அடுத்த இரண்டு இடத்தை பிடித்திருப்பது  தென் மாநிலங்கள் தான். இரண்டாவது இடத்தில் கேரளா, மூன்றாம் இடத்தில் கர்நாடகா. நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று முந்திக் கொண்டு வருகிறது தெலங்கானா; இது முதல் ஆண்டிலேயே பத்தாவது இடத்துக்கு வந்து விட்டது.

இமாச்சல் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற வருமானம் இல்லாத மாநிலங்கள் கூட முன்னணி வரிசையில் உள்ளன. ஆனால் எல்லா வளங்களும் உள்ள தமிழ்நாடு 20வது இடத்தில் உள்ளது.  அதாவது கடைசி இடம்.  ‘பரபரப்பாக அறிவிப்புகள் வரும் போதெல்லாம் தமிழ்நாடு உண்மையில் வளர்ச்சி கண்டு விட்டது  என்று தோன்றும். இப்போது தான்  உண்மை புரிகிறது, அதில் உண்மையில்லை  என்று;  எல்லாம் அறிவிப்பு மட்டும்  தான்; உருப்படியான வளர்ச்சிக்கான செயல்பாடு ஜீரோ’ – இப்படி தான் பலரும் கருதுகின்றனர்.

சுற்றுச்சூழலில் 8 வது இடம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முதலிடத்தில் உள்ளது அரியானா. கர்நாடகா கூட நமக்கு முன்னால் உள்ளது. தமிழ்நாடு 8வது இடத்தில் தங்கி விட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு, மரங்கள் வளர்ப்பது, சுகாதார கேடான தொழிலக வாயுக்களை கட்டுப்படுத்துவது, தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிப்பது போன்ற விஷயங்களில் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு. சிறிய மாநிலங்களில் முதலிடம் வகிப்பது புதுச்சேரி; புதிதாக துவங்கப்படும் தொழிற்சாைலையாகட்டும், மருத்துவமனையாகட்டும், சுத்திகரிப்பு முறை கடைபிடித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் உரிமம் ரத்து. இது தான் புதுச்சேரி, சுற்றுச்சூழலில் சாதிக்க காரணமாகி உள்ளது.

கட்டமைப்பில் 17 வது இடம்

சாலை மேம்பாடு, பாலங்கள் கட்டுவது, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள் அமைப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது என்று பல வகையிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தவறியதால் தமிழ்நாடு 17 வது இடத்தில் உள்ளது.  ஒரு பக்கம் மழை வெள்ளம் என்று இயற்கை சீற்றங்கள், இன்னொரு பக்கம் பிரிவினைவாதிகளால் பிரச்னை இருந்தாலும், சாலைகளை மேம்படுத்துவது உட்பட கட்டமைப்பு வசதிகளில் சாதித்திருப்பது அசாம். கடந்த 2011 ல் 37 சதவீதம் மக்களுக்கு  கிடைத்த மின்சார வசதி, இப்போது 70வது சதவீதத்தை எட்டியுள்ளது.

நிர்வாகத்தில் 9வது இடம்

சட்டம் ஒழுங்கு, நிதி ஒதுக்கீடு, பெண்கள் முன்னேற்றம் என்று பல துறைகளில் சாதிப்பது தான் நல்ல நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு; இதில் சாதித்திருப்பது கேரளாதான். ‘கிராம பஞ்சாயத்து வரை நிதி ஒதுக்கலில் சீரான போக்கு கடைபிடிப்பது தான் நல்ல நிர்வாகத்துக்கு காரணம். மக்களை சென்றடையாத எந்த திட்டமும் வீண்’ என்கிறார் முதல்வர் உம்மன் சாண்டி. மாநகராட்சி முதல் பதிவுத்துறை வரை மின்னணு வசதி இருந்தாலும், முழுமையாக பயன்படுத்த  முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. அரசு வெப்சைட்கள் பலவும் முழு தகவல்களை தருவதில்லை என்ற குறை பலரிடம் உள்ளது.

கல்வியில் 13 வது இடம்

கல்வியில் கேரளாவுடன் போட்டி போட்ட காலம் போய் விட்டது. நாம் விட்டுக் கொடுத்து விட்டோம். அது முதலிடத்தில் இப்போது; நாம் 13வது இடத்தில். கேரளாவில்  கடந்தாண்டு மட்டும் பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல ஓராண்டில் புதிதாக 8 ஆயிரம் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. கர்நாடகா கூட எட்டாவது இடத்தில் இருக்கும் போது, நாம் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

– dinakaran.com

TAGS: