மலேசியாவில் தமிழர்களுக்கு கொடுமை: நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

India-Malaysia flagமலேசியாவில் 14 தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதிக ஊதியம் வழங்கப்படும் என்ற ஏஜென்ட்டுகளின் வாக்குறுதியை நம்பி மலேசியாவிற்கு வந்த 14 தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், இந்த விவகாரத்தை காவல்துறை கவனத்தில் எடுத்துள்ளது. இதுதொடர்பான உதவிக்கு இந்திய தூதரகத்தை பாதிக்கப்பட்ட தமிழர்கள் நாடலாம். பாதிக்கப்பட்ட தமிழர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: