பதன்கோட் பதிலடி: 5 தீவிரவாதிகள் சடலங்கள் கண்டெடுப்பு.. 1 தீவிரவாதி உடல் கிடைக்காததால் பரபரப்பு

pathankotசண்டிகர்: பதன்கோட் விமானதள தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே தீவிரவாதியை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக மூத்த தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) அதிகாரி கூறியுள்ளார்.

பதன்கோட் விமானபடை தளத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 7 பாதுகாப்புபடையினர் பலியானார்கள். 5 தீவிரவாதிகள் கொல்லபட்டனர்.

6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக நேற்று மாலை தகவல்கள் வெளியான நிலையில், என்.எஸ்.ஜி அதிகாரி ஒருவர் கூறுகையில், பதுங்கி உள்ள ஒரு தீவிரவாதியை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு படை குடும்பங்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றார். 6 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அதில் ஒருவர் உடல்தான் இன்னும் கிடைக்கவில்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamil.oneindia.com

TAGS: